×

பைக் மோதி மூதாட்டி பலி

 

விழுப்புரம், ஆக. 19: விழுப்புரம் அருகே இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே குடுமியான் குப்பத்தைச் சேர்ந்தவர் கண்ணையன் மனைவி பல்காரு(80). நேற்று இவர் பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றபோது இரு சக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த வளவனூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.

The post பைக் மோதி மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Kannaiyan ,Balkaru ,Kudumyan Kuppa ,
× RELATED விழுப்புரம் நகராட்சியில் லஞ்சம்...