×

சுதந்திர தினவிழா நெய்யூர் பேரூராட்சி

திங்கள்சந்தை, ஆக.18: நெய்யூர் பேரூராட்சி அலுவலகத்தில் 78வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் சகாய மேரி சசிகலா, துணைத் தலைவர் பென் டேவிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவி பி.வி பிரதீபா தலைமை வகித்து தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின உரையாற்றினார். தொடர்ந்து தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இனிப்பும் வழங்கப்பட்டது. பேரூராட்சி பகுதிகளில் மரக்கன்றுகளையும் நட்டனர். விழாவில் கவுன்சிலர்கள் ஜோசப்ராஜ், விசுவாசம், கவிதா ராணி, ராஜகலா உட்பட பேரூராட்சி பணியாளர்கள், கலந்து கொண்டனர்.

The post சுதந்திர தினவிழா நெய்யூர் பேரூராட்சி appeared first on Dinakaran.

Tags : Independence ,Day ,Nayur ,Municipality ,Independence Day ,Neyur Municipal Office ,Municipal Executive Officer ,Sakaya Mary Sasikala ,Deputy ,Ben David ,Nayur Municipality ,Dinakaran ,
× RELATED விடுதலை போராட்ட வீரர் ஓய்வூதியம்...