×

ஊட்டி தாவரவியல் பூங்காவில் 15 ஆயிரம் தொட்டியில் மலர் நாற்றுகள் நடவு பணி


ஊட்டி: இரண்டாவது சீசனை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் 15,000 தொட்டிகளில் மலர் நாற்றுக்கள் நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கோடை சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதற்கு அடுத்தபடியாக இரண்டாம் சீசன் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வருவது வழக்கம். கோடை சீசனின் போது தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இரண்டாம் சீசனின் போது பூங்காவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் பல்வேறு மலர்கள் பூத்துக் குலுங்கும். மேலும் 15 ஆயிரம் மலர் தொட்டிகளில் பல வண்ண மலர் செடிகள் நடவு செய்யப்படும்.

இந்த தொட்டிகளில் பூக்கும் மலர்கள் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்படும். இதனை பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இரண்டாம் சீசன் துவங்க இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், தற்போது தாவரவியல் பூங்கா தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பூங்காவில் உள்ள 15 ஆயிரம் மலர் தொட்டிகளில் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் நடைபெறுகிறது. இந்த தொட்டிகளில் பல வகையான மலர் செடிகள் நடவு செய்யப்படுகிறது. அடுத்த மாதம் 15ம் தேதிக்கு மேல் இந்த தொட்டிகளில் மலர்கள் பூத்து விடும். இரண்டாம் சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த மலர்களை கண்டு ரசிக்கலாம்.

The post ஊட்டி தாவரவியல் பூங்காவில் 15 ஆயிரம் தொட்டியில் மலர் நாற்றுகள் நடவு பணி appeared first on Dinakaran.

Tags : Ooty Botanical Garden ,Ooty ,Nilgiris ,
× RELATED தோடர் பழங்குடியின மக்கள் விற்பனை நிலைய கட்டுமான பணி தீவிரம்