×

மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்கள் 4 பேர் மீது வழக்கு

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமம் மேலத்தெருவை சேர்ந்த சந்திரகாசன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் புஷ்பவனத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (70), ராஜேஷ் (26), ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த பன்னீர்செல்வம் (50), வேல்முருகன் (36) ஆகியோர் கடந்த 13ம் தேதி கோடியக்கரைக்கு தென்கிழக்கே 15 கடல் மைல் தொலைவில் இரவு மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக 2 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 6 பேர், வேதாரண்யம் மீனவர்களின் படகில் ஏறி இரும்பு பைப்புகளால் 4 பேரை சரமாரியாக தாக்கியதோடு படகில் இருந்த ₹3 லட்சம் மதிப்பிலான 700 கிலோ வலைகளை பறித்து சென்றனர்.

இதுகுறித்து மீனவர்கள் அளித்த புகாரின்பேரில் வேதாரண்யம் கடலோர காவல் குழும டிஎஸ்பி சுரேஷ், இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் ஆகியோர் இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்கள் 4 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Muthukrishnan ,Rajesh ,Pushbhavana ,Panneerselvam ,Velmurugan ,Arukattuthura ,Chandrakasan ,Melatheru ,Arukattuthura, Nagai district ,
× RELATED சிறப்பாக செயல்படும் அரசு பள்ளிகள்: ஐஸ்வர்யா ராஜேஷ் பாராட்டு