×

பாடப்புத்தக விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: இபிஎஸ், ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: பள்ளி பாடப் புத்தகங்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் வலியுறுத்தி உள்ளனர். எடப்பாடி பழனிசாமி: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், அரசு பாடத் திட்டத்தில் படிக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களின் விலையை சுமார் 40 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இது கண்டனத்திற்குரியது. மாநில கல்வி திட்டத்தின்படி தனியார் பள்ளகளில் மாணவ, மாணவிகளை சேர்த்துள்ள பெற்றோர்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதை காரணம்காட்டி, மாணவ, மாணவியரிடம் அதிகக் கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகள் முனைப்பு காட்ட நேரிடும். எனவே, பாடப் புத்தகங்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்’’ என கூறியுள்ளார்.

The post பாடப்புத்தக விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: இபிஎஸ், ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : OPS ,Chennai ,Eadapadi Palanisami ,EDAPPADI PALANISAMI ,TAMIL NADU TEXTBOOK INSTITUTE ,CURRICULUM ,Dinakaran ,
× RELATED கொடநாடு வழக்கில் தன்னை...