×

தாய், மகன்களை தாக்கிய 3 பேர் கைது மேலும் இருவருக்கு போலீஸ் வலை குடியாத்தத்தில் சுவாமி ஊர்வலத்தின்போது

குடியாத்தம், ஆக. 14: குடியாத்தத்தில் சுவாமி ஊர்வலத்தின்போது தாய், மகன்களை தாக்கிய 3 பேரை கைது செய்த போலீசார், மேலும் இருவரை தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் கடந்த 9ம் தேதி திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள முக்கிய தெரு வழியாக சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த சிலர் பைக்கில் மோதுவது போல் சென்று உள்ளனர். இதனால் அவர்களுக்கும் சுவாமி ஊர்வலத்தில் சென்ற சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.

பின்னர் பைக்கில் வந்தவர்கள் குறிஞ்சி நகர் பகுதிக்குச் சென்று சிலரை அழைத்து வந்து ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது உருட்டு கட்டை, இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் கஜேந்திரன் மனைவி லதா(57), அவரது மகன்கள் கார்த்தி(37), வினோத்குமார்(34) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து புகாரின்பேரில், குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்குப்பதிவு செய்து குடியாத்தம் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த உலகநாதன் மகன் பிரசாந்த்(25) மற்றும் 17 வயது பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் என 3 பேரை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post தாய், மகன்களை தாக்கிய 3 பேர் கைது மேலும் இருவருக்கு போலீஸ் வலை குடியாத்தத்தில் சுவாமி ஊர்வலத்தின்போது appeared first on Dinakaran.

Tags : Swami ,Kudiatham ,Swami procession ,Gudiyattam ,Mariyamman temple ,Chetukarai ,Kudiatham, Vellore district ,
× RELATED மர்ம நபர்கள் மடத்தில் நுழைந்து திருட...