×

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாபர் சாதிக்கின் காவல் நீட்டிப்பு

சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேசிய போதை பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறையால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத் துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து ஜூன் 26ம் தேதி கைது செய்தது.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைவதால் சென்னை புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு ஜாபர் சாதிக் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 23ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாபர் சாதிக்கின் காவல் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Zafar Sadiq ,Enforcement Department ,Chennai ,Jaber Sadiq ,National Narcotics Prevention Police ,Jafar Sadiq ,
× RELATED ஜாபர் சாதிக் மீதான போதைப் பொருள்...