×

கோவை பீளமேட்டில் பேச மறுத்த கள்ளக்காதலிக்கு நடுரோட்டில் கத்திக்குத்து: தொழிலாளி கைது

கோவை. ஆக. 10: கோவையில் பேச மறுத்த கள்ளக்காதலியை நடுரோட்டில் கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் 37 வயது பெண். இவருக்கு 2 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர். அவரது கணவர் இறந்து விட்ட நிலையில் அந்த பெண் அங்குள்ள விடுதியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2 ஆண்டிற்கு முன்பு அந்த பெண்ணுக்கும், பீளமேடு பயணியர் மில் ரோட்டை சேர்ந்த தொழிலாளி கணேசன் (40) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் நெருங்கி பழகியதாக தெரிகிறது. ஆனால், சிறிது காலத்தில் கணேசனின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த பெண் அவருடன் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்தினார். இதனால், அந்த பெண் மீது கணேசனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனையடுத்து, நேற்று முன்தினம் அந்த பெண் அருகே உள்ள மளிகை கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கணேசன் அவரிடம் தகராறு செய்தார். ஏன் என்னிடம் பேச, பழக மறுக்கிறாய்? என கேட்டு வாக்குவாதம் செய்தார். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த கணேசன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக பெண்ணை குத்தினார். இதில், அவர் பலத்த காயமடைந்தார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர்.

The post கோவை பீளமேட்டில் பேச மறுத்த கள்ளக்காதலிக்கு நடுரோட்டில் கத்திக்குத்து: தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Beelamedu ,Dinakaran ,
× RELATED வால்பாறை அருகே ஆம்புலன்ஸ் மீது பைக் மோதி கோவை கல்லூரி மாணவர் பலி