பாரிஸ் ஒலிம்பிக் ஆண்கள் 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தின் 2வது தகுதிச் சுற்றில் நேற்று பங்கேற்ற இந்திய அணி 4வதாக வந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பறிகொடுத்தது. முகமது அனாஸ், ராஜேஷ் ரமேஷ், அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல் ஆகியோர் அடங்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 3 நிமிடம், 00.58 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்தது (3:00.58).
இந்த பிரிவில் பங்கேற்ற பிரான்ஸ் (2:59.53), பெல்ஜியம் (2:59.84), இத்தாலி (3:00.26) அணிகள் முதல் 3 இடங்களைப் பிடித்து பைனலுக்கு தகுதி பெற்றன. 3வது இடம் பிடித்த இத்தாலிக்கும், 4வது இடம் பிடித்த இந்தியாவுக்குமான வித்தியாசம் வெறும் 0.32 விநாடி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
The post நூலிழையில் பைனல் வாய்ப்பை இழந்தது இந்தியா appeared first on Dinakaran.