- பஞ்சாயத்து
- ஜனாதிபதி
- திமுக
- அமைச்சர்
- கே.ஆர்.பெரியகருப்பன்
- காரைக்குடி
- பஞ்சவேல்
- ஓ.சிறுவயலா
- கூட்டுறவு அமைச்சர்
- முன்னாள்
- மு. தென்னவன்
- யூனியன் செயலாளர்கள்
- டாக்டர்
- ஆனந்த்
- குன்ரக்குடி சுப்பிரமணியன்
- கே.பெரியகருப்பன்
- தின மலர்
காரைக்குடி, ஆக. 9: காரைக்குடி அருகே ஓ.சிறுவயலை ஊராட்சி தலைவராக உள்ளவர் குழந்தைவேல். இவர் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் டாக்டர் ஆனந்த், குன்றக்குடி சுப்பிரமணியன், மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கேஎஸ்.ரவி, தி.சூரக்குடி ஊராட்சி தலைவர் டாக்டர் முருகப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசுகையில், தேர்தலின் போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பெண்கள் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம், தமிழ்புதவன் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து வருகிறார். சொன்னதையும், சொல்லாத பல்வேறு திட்டங்களையும் முதல்வர் நிறைவேற்றி வருகிறார். முதல்வரின் சாதனைகளை கண்டு ஏராளமானோர் தங்களை திமுகவில் இணைத்துக்கொள்வது அதிகரித்து வருகிறது, என்றார்.
The post அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்த ஊராட்சி தலைவர் appeared first on Dinakaran.