×

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

கீழக்கரை,ஆக.8: கீழக்கரையில் மரம் வைப்பதற்கு குழி தோண்டிய போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார். கீழக்கரையில் மேலத்தெரு அருகே தோப்பில், பரமக்குடி அருகே தெற்குபட்டு விளத்தூரை சேர்ந்த மகேந்திரன்(37) குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று மரம் வைக்க மகேந்திரன் மண்வெட்டியை கொண்டு தோண்டிய போது மகேந்திரன் உடம்பில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Keejakarai ,Mahendran ,Velathur ,Paramakkudy ,Melatheru ,Keezakarai ,
× RELATED நடத்தை சந்தேகத்தால் பயங்கரம்: மனைவி...