×

கலைஞர் நினைவு நாள் திமுக அமைதி ஊர்வலம்

ஜெயங்கொண்டம், ஆக. 8: ஜெயங்கொண்டத்தில் கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு நகர திமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது. திமுகவினர் அவரது உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் நகர திமுக சார்பில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர திமுக செயலாளரும், நகர் மன்ற துணைத் தலைவருமான வெ.கொ.கருணாநிதி தலைமை வகித்தார். திமுக சட்டத்திட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதியில் இருந்து அமைதி ஊர்வலமாக சென்று, அண்ணா சிலை அருகில் அமைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதி திருவுருவ படத்திற்கு, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர், விசிக மாவட்ட செயலாளர் கதிர்வளவன், மாவட்ட திமுக துணைச் செயலாளர் கணேசன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தங்க.ராமகிருஷ்ணன், மாவட்ட அணி நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு கழக செயலாளர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

The post கலைஞர் நினைவு நாள் திமுக அமைதி ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : Artist Memorial Day ,DMK ,Peace Procession ,Jayangondam ,Jayangonda ,Jayangkondam Assembly Constituency ,Jayangkondam City DMK ,Muthamil Scholar ,Dr. ,Kalainar ,Kalainar Memorial Day DMK Peace Procession ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டம் முழுவதும் அண்ணா பிறந்தநாள் விழா உற்சாக கொண்டாட்டம்