×

கோர்ட்டில் ஆஜராகாத வாலிபர் கைது

களக்காடு, ஆக.8: களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வானுமாமலை (38). இவர் மீது களக்காடு போலீசில் கடந்த 2022ம் ஆண்டு கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பின் வானுமாமலை நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 1 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து வானுமாமலையை கைது செய்யும் படி கோர்ட்டில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து களக்காடு போலீசார் தலைமறைவாக இருந்த வானுமாமலையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

The post கோர்ட்டில் ஆஜராகாத வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Kalakkadu ,Vanumamalai ,Singikulam South Street ,Kalakadu ,Dinakaran ,
× RELATED முண்டந்துறை வனப்பகுதியில் சாலை அமைக்காதது ஏன்? : ஐகோர்ட்