×

மதுரை மாட்டுத் தாவணியில் டைடல் பார்க் அமைக்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

மதுரை: மதுரை மாட்டுத் தாவணியில் டைடல் பார்க் அமைக்க ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. “மதுரையின் நீண்டநாள் கோரிக்கை வடிவம் பெறுகிறது, ஒப்பந்தப்புள்ளி வெளியிட்ட முதலமைச்சர், அமைச்சர்களுக்கு நன்றி” என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான 5.63 ஏக்கரை 45 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்க முடிவு செய்து கடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரையில் ரூ.1200 கோடி மதிப்பில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என 2022 செப்டம்பரில் முதல்வர் அறிவித்திருந்தார்.

The post மதுரை மாட்டுத் தாவணியில் டைடல் பார்க் அமைக்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Tidal Park ,Madurai Madhu Thavani ,Madurai ,Madurai Mattu Thavani ,Chief Minister ,Su Venkatesan ,Madurai Corporation ,Mattuth ,Thavani ,Dinakaran ,
× RELATED மதுரை வெள்ளக்கல் அருகே விவசாய...