×

மேலூர் யூனியன் அலுவலகத்தில் விவசாய சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்

மேலூர், ஜூலை 31: 100 நாள் வேலை திட்டத்தில் பணி புரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஆண்டுக்கு, 100 நாள் வேலை வழங்க வேண்டும். நாள் கூலியை ரூ. 319 வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று மேலூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. விவசாய தொழிலாளர் சங்க மேலூர் தாலுகா செயலாளர் தனசேகரன் தலைமையில், சங்க மாநில பொது செயலாளர் அமிர்தலிங்கம், மதுரை மாவட்ட செயலாளர் உமா மகேஸ்வரன் ஆகியோர் உரையாற்றினர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் பாலா, தாலுகா செயலாளர் கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் மணவாளன் வாழ்த்தி பேசினர். மேலும் தாலுகா தலைவர் குமரன், உட்பட 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

The post மேலூர் யூனியன் அலுவலகத்தில் விவசாய சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Mellur Union ,Melur ,India ,
× RELATED மாட்டு வண்டி பந்தயத்தில் அதிர்ச்சி: காளைகள் மிதித்து தொழிலாளி பலி