×

ஆவடி காவல் ஆணையரகத்தில் 114 பேருக்கு குண்டாஸ்


ஆவடி: ஆவடி காவல் ஆணையரகத்தில், கமிஷனர் சங்கர் உத்தரவுப்படி, தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 68 ரவுடிகள், கொள்ளை மற்றும் திருட்டு வழக்கில் 15 பேர், போதைப்பொருள் வழக்கில் 24 பேர், கள்ளச்சந்தை வழக்கில் 4 பேர் மற்றும் இணையதள குற்ற வழக்குகளில் 3 பேர் என இந்த ஆண்டு 114 பேர் மீது, கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில், குண்டர் சட்டம் பாய்ந்தது. குறிப்பாக, இம்மாதம், தொடர் குற்றச் சம்பவங்களில் 18 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

The post ஆவடி காவல் ஆணையரகத்தில் 114 பேருக்கு குண்டாஸ் appeared first on Dinakaran.

Tags : Aavadi ,Commissionerate ,Aavadi Police Commissionerate ,Commissioner ,Shankar ,
× RELATED ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் விநாயகர்...