- அமைச்சர்
- அன்பில் மகேஷ்
- தஞ்சாவூர்
- தமிழ்நாட்டுப் பள்ளி
- கல்வி
- அங்கன்வாடி
- மனகராம்பாய் பஞ்சாயத்
- டிக்டோஜாக்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மணக்கரம்பை ஊராட்சியில் ரூ.13.97லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: டிக்டோ ஜாக் அமைப்பினர், 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தும் நிலையில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் 5 அல்லது 6 கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வழிவகையை மேற்கொண்டு வருகிறோம். முதன்மை செயலாளரும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அப்போது நிதி சார்ந்த கோரிக்கைகள், நிதி சாராத கோரிக்கைகள் என்னென்ன இருக்கின்றன என்பதை அறிந்து அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். கட்டாய கல்வி உரிமை சட்டத்துக்கு ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டிய நிதி குறித்து ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். என்ன பதில் வருகிறது என்பதை பார்த்து தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
The post போராட்டம் நடத்தும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற பரிசீலனை: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி appeared first on Dinakaran.