×

காசா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்: 30 பேர் பரிதாப பலி

டெய்ர் அல்-பலாஹ்: காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று காசா பகுதியில் உள்ள டெய்ர் அல்-பாலாவில் பெண்கள் பள்ளியில் தஞ்சமடைந்த குறைந்தது 30 பேர் இஸ்ரேல் நடத்திய வான்வழித்தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். அவர்களது சடலங்கள் அல் அக்ஸா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும் காசாவில் மற்ற இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெய்ர் அல்-பலாவின் அல் அக்ஸா மருத்துவமனை இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்தியது. இதுவரை காசாவில் நடந்த போரில் 39,100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 17,000 குழந்தைகள் இப்போது பெற்றோர் இல்லாமல் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post காசா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்: 30 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Israel ,school ,Deir ,al-Balah ,Gaza ,Deir al-Bala ,Gaza Strip ,Al-Aqsa Hospital ,Gaza school ,
× RELATED ஹிஸ்புல்லா மீதான 21 நாட்கள்...