- முதல் அமைச்சர்
- திட்டம்
- சிங்களாந்தபுரம்
- தரையூர் தரடியூர்
- காளிபட்டி தனியார் கல்லூரி
- சிங்களாந்தபுரம் ஊராட்சி
- தரடியூர்
- யூனியன்
- திருச்சி மாவட்டம்
- சட்டமன்ற உறுப்பினர்
- ஸ்டாலின் குமார்
- பஞ்சாயத்து
- சிங்களாந்தபுரம், சிங்களாந்தபுரம்
துறையூர், ஜூலை 27: திருச்சி மாவட்டம், துறையூர் ஒன்றியம் சிங்களாந்தபுரம் ஊராட்சியில் உள்ள காளிப்பட்டி தனியார் கல்லூரியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின்குமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், பழங்குடியின மாவட்ட திட்ட அலுவலர் கீதா, ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை வீரபத்திரன், துறையூர் ஒன்றிய குழு தலைவர் சரண்யா மோகன்தாஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.இம்முகாமில்ம வருவாய் துறை , ஊரக வளர்ச்சித்துறை, தாட்கோ , சமூக நலம் துறை , கல்வி துறை, வேலை வாய்ப்பு துறை உள்ளிட்ட அரசின் பல்துறைகளுக்கும் சேர்த்து நலத்திட்ட உதவிகள் கோரி 537 மனுக்கள் பெறப்பட்டது.
இந்த முகாமில் சிங்களாந்தபுரம், முத்தையம் பாளையம், நடுவலூர்,பகளவாடி, ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில், துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிஜஸ்டின் ஜோ, சரவணகுமார், சிங்களாந்தபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி பாஸ்கர், முத்தைம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், நடுவலூர் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன், ஒன்றிய கவுன்சிலர் முருகேசன் மற்றும் துறை அலுவலர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
The post துறையூர் சிங்களாந்தபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் appeared first on Dinakaran.