×

ஆலங்குடி அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

 

புதுக்கோட்டை, ஜூலை 27: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மாங்காடு இலுப்ப புஞ்சையை சேர்ந்தவர் சங்கர். கூலி தொழிலாளி. இவரது மகன் சபரீஷ்(9). அந்த பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து வழக்கம் போல் வீட்டுக்கு வந்த பிறகு, அங்குள்ள குளத்துக்கு குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக சபரீஷ் நீரில் மூழ்கினார். உயிருக்குப் போராடிய சபரீஷை மீட்டு அப்பகுதியினர் வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சபரீஷ் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆலங்குடி அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலி appeared first on Dinakaran.

Tags : Alangudi ,Pudukottai ,Shankar ,Mangadu Iluppa Punchai ,Pudukottai district ,Sabareesh ,
× RELATED புதுகை எஸ்பி அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி