×

சாணார்பட்டி அருகே டூவீலர் விபத்தில் ஐஸ் வியாபாரி பலி

 

கோபால்பட்டி, ஜூலை 27: சாணார்பட்டி அருகே முளையூரை அடுத்த ராவுத்தம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி செல்வம் (44). ஐஸ் வியாபாரி. இவர் நேற்று முன்தினம் இரவு எஸ்.கொடையில் உள்ள தனது மாமானார் வீட்டிற்கு சென்று விட்டு டூவீலரில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். நத்தம் சாலையில் ஒத்தக்கடை அருகே வந்த ேபாது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரது டூவீலர் மீது மோதியது, இதில் படுகாயமடைந்த பாண்டி செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த சாணார்பட்டி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பாண்டி செல்வத்தின் மனைவி செல்வி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

 

The post சாணார்பட்டி அருகே டூவீலர் விபத்தில் ஐஸ் வியாபாரி பலி appeared first on Dinakaran.

Tags : Chanarpatti ,Gopalpatti ,Pandi Selvam ,Rauthampatti ,Mulayur ,S. Kodai ,
× RELATED ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்