×

மனைவி விவாகரத்து கேட்டதால் காதல் கணவர் தற்கொலை: உடலை பார்த்து கதறிய பாட்டி மயங்கி சாவு

சமயபுரம்: திருச்சி அருகே மனைவி விவாகரத்து கேட்டதால் கணவர் தற்கொலை செய்து ெகாண்டார். இவரது உடலை பார்த்து கதறி அழுத பாட்டி மயங்கி விழுந்து இறந்தார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அயனாவரம் காலனியை சேர்ந்த நாசர்அலி மகன் ஷாஜகான் (23). மாடுபிடி வீரரான இவர், கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 2022ல் தஞ்சாவூரை சேர்ந்த சஞ்சுமா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இதில் மனைவி கர்ப்பிணியாக இருந்த நிலையில் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு தஞ்சையில் உள்ள தாய் வீட்டுக்கு சஞ்சுமா சென்றார்.

கடந்த 6 மாதத்துக்கு முன் சஞ்சுமாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. மனைவி, குழந்தையை பார்க்க தஞ்சைக்கு ஷாஜகான் சென்றார். அப்போது குழந்தையை பார்க்க மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.
இதனால் மனமுடைந்த ஷாஜகான், தினம்தோறும் மதுகுடித்து விட்டு வந்து பெற்றோரிடம் புலம்பி வந்தார். இதனால் சஞ்சுமாவின் பெற்றோரிடம், ஷாஜகானின் பெற்றோர் பேசினர். அப்போது எனது மகள் விவாகரத்து செய்ய விரும்புகிறாள். இனி தொந்தரவு செய்ய வேண்டாம் என அவர்கள் கூறி விட்டனர்.

இதனால் இஸ்லாமிய வழக்கப்படி தலாக் கூறி விவகாரத்து செய்து விடுவாரோ என்ற அச்சத்தில் ஷாஜகான் இருந்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் ஷாஜகான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பேரன் இறந்த தகவல் கிடைத்ததும் சமயபுரம் அருகே உள்ள ஈச்சம்பட்டியை சேர்ந்த ஷாஜகானின் பாட்டி ஆமினா (70) நேற்று காலை வந்தார். அப்போது ஷாஜகானின் உடலை பார்த்து கதறி அழுத ஆமினா திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post மனைவி விவாகரத்து கேட்டதால் காதல் கணவர் தற்கொலை: உடலை பார்த்து கதறிய பாட்டி மயங்கி சாவு appeared first on Dinakaran.

Tags : Samayapuram ,Trichy ,Shaja Khan ,Nasser Ali ,Ayanavaram Colony, Mannachanallur, Trichy District ,Madupidi ,
× RELATED குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து...