×

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அத்தை உள்பட 6 பேர் கைது

தாம்பரம்: தாம்பரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, தனது சொந்த அத்தையால் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நல குழுவினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அவர்கள் சேலையூர் போலீசார் உதவியுடன் சம்பவ இடத்திற்கு வந்து, சிறுமியை மீட்டு கூடுவாஞ்சேரியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அவரது அத்தை, பிரகாஷ் (39), தாமோதரன் (54), கவிதா (37), கற்பகம் (61), சீனிவாசன் (39) ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அத்தை உள்பட 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Chengalpattu ,Selaiyur police ,
× RELATED திடீரென தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்