×

வங்கியில் நகை அடகு வைத்து கடனாக பெற்றது மொபட்டில் வைத்திருந்த ₹3.10 லட்சம் பணம் திருட்டு

*சிசிடிவி காட்சிகள் வைரல்

வாணியம்பாடி : வாணியம்பாடியில் மொபட்டில் வைத்திருந்த ரூ.3.10 லட்சம் பணத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. வாணியம்பாடி அடுத்த செக்குமேடு பகுதியை சேர்ந்தவர் மோகன்(50), விவசாயி. இவர் நேற்று தன்னுடைய மனைவியின் நகைகளை வாணியம்பாடியில் உள்ள வங்கியில் அடகு வைத்து ரூ.3.10 லட்சம் பணத்தை கடனாக பெற்றார்.

மேலும் அந்த பணத்தை மொபட்டின் சீட்டிற்கு அடியில் வைத்துக் கொண்டு அங்கிருந்து நியூடவுன் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் மொபட்டை வெளியே நிறுத்தி விட்டு அங்கு சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பார்க்க உள்ளே சென்றார்.

தொடர்ந்து, வெளியே வந்து பார்த்த போது மொபட்டின் சீட்டிற்கு அடியில் வைத்திருந்த ரூ.3.10 லட்சம் பணம் திருடு போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசி டிவி கேமரா காட்சிகளை பார்த்த போது 3 மர்ம நபர்கள் அவரை நோட்டமிட்டு பின் தொடர்ந்து வந்து பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மோகன் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவியில் பதிவான மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில், தற்போது அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

The post வங்கியில் நகை அடகு வைத்து கடனாக பெற்றது மொபட்டில் வைத்திருந்த ₹3.10 லட்சம் பணம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Mobat ,Vaniyampadi ,Mohan ,Chekumedu ,
× RELATED தாளவாடி மலைப்பகுதியில் வாகன தணிக்கையில் ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்