×

மின்கட்டணத்தை திரும்பபெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

 

தோகைமலை, ஜூலை 26: ஒன்றிய அரசின் மின் திருத்தச்சட்டத்தால்தான் தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வுக்கு காரணம் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நடந்த மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி நடந்த கண்டன ஆர்பாட்டத்தில் பேசினர். கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தோகைமலை பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்வ்பாட்டத்திற்கு தோகைமலை ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஒன்றிய குழு நிர்வாகிகள் வடிவேல், முருகேசன், தங்கராசு, அழகேசன், செல்வராஜ், ஹரிராமன், பெருமாள், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக கரூர் மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் ஒன்றிய பாஜக அரசின் மின் திருத்தச்சட்டம் அமல்படுத்திய காரணத்தால், இன்று தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி உள்ளது. ஆகவே ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு மின் திருத்தச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும். இதேபோல் தமிழ்நாடு அரசும் உயர்த்தப்பட்டு உள்ள மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்று பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் முனியப்பன், சங்கப்பிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மின்கட்டணத்தை திரும்பபெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Marxist ,Communist ,Thokaimalai ,Tamil Nadu ,Marxist Communist Party ,Karur… ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு தொடர் சிகிச்சை