×

திருநெல்வேலி, கோவை மேயர் பதவிகளை நிரப்ப உத்தரவு: மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு

சென்னை: திருநெல்வேலி, கோவை மாநகராட்சி மேயர் பதவிகளை நிரப்ப மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: தற்போது காலியாக உள்ள திருநெல்வேலி மாநகராட்சி மேயர் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவிகளை நிரப்பிடும் பொருட்டு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான மாநகராட்சிகளின் கூட்டங்களை நடத்தி மேயர்களை தேர்ந்தெடுத்திட உரிய அறிவுரைகளை தொடர்புடைய மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. மேலும், ஆணையத்திற்கு ஏற்கனவே அறிக்கைகள் மூலம் தெரிவிக்கப்பட்ட ஏனைய நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலி பதவிகளுக்கும் சேர்த்து மறைமுக தேர்தல்கள் நடத்துவற்கான கூட்டங்களை நடத்தி அந்த பதவிகளை நிரப்பிட உரிய அறிவுரைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post திருநெல்வேலி, கோவை மேயர் பதவிகளை நிரப்ப உத்தரவு: மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tirunelveli ,Coimbatore ,Mayor ,State ,CHENNAI ,State Election Commissioner ,Election ,Tamil Nadu ,Jyoti Nirmalaswamy ,
× RELATED முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை...