×

காரை வாங்கி கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றியவர் கைது

புவனகிரி, ஜூலை 25: புதுச்சத்திரம் அருகே உள்ள திருச்சோபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (34). இவருக்கு சொந்தமான காரை கடலூர் ஈச்சங்காட்டைச் சேர்ந்த பிரகாஷ், கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜா உள்ளிட்டோர் திருமண வேலைக்காக வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராமகிருஷ்ணன் காரை பலமுறை கேட்டும் திருப்பித் தரவில்லை. இதையடுத்து சம்பவம் குறித்து ராமகிருஷ்ணன் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கீழமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த விக்ரமன்(23) என்பவரை புதுச்சத்திரம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post காரை வாங்கி கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Bhubaneswar ,Ramakrishnan ,Tirchopuram ,Puduchattaram ,Prakash ,Echangat ,Cuddalore ,Raja ,Kumbakonam ,
× RELATED குழந்தைகளுக்கு எதிரான கொடூர...