×

35 நாளில் கைதான 89 மீனவர்களை விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 35 நாட்களில் இதுவரை 7 கட்டங்களில் மொத்தம் 89 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போது கைது செய்யப்பட்டவர்களையும் சேர்த்து 89 மீனவர்கள் சிறையில் வாடி வரும் நிலையில், அவர்களை நம்பியுள்ள குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்றன.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படும் அவலம் இனியும் தொடரக் கூடாது. அதற்காக ஒன்றிய அரசுக்கு அனைத்து வழிகளிலும் தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்.

The post 35 நாளில் கைதான 89 மீனவர்களை விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Union ,state governments ,Anbumani ,CHENNAI ,Sri Lankan Navy ,governments ,Dinakaran ,
× RELATED பட்டியலின மக்களுக்கு சிறப்பு நிதி...