×

அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் ஒரே நாளில் 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்

சென்னை: பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது: தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் அதிகபட்ச பால் கொள்முதலாக 36.09 லட்சம் லிட்டர் பால், 27 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் மூலம் ஆவின் கொள்முதல் செய்துள்ளது. மேலும் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உள்ளூர் விற்பனையான 4 லட்சம் லிட்டர் பால் கணக்கில் கொள்ளும்போது தமிழ்நாட்டில் பால்வளத்துறை மூலமாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது 2800 மெ.டன் வெண்ணெய்யும், 4200 மெ.டன் பால் பவுடரும் கையிருப்பில் உள்ளது.

இந்த கையிருப்பைக் கொண்டு எதிர்வரும் பண்டிகை காலங்களுக்கு தேவையான பால் பொருட்களை பொதுமக்களுக்கு தங்குதடையின்றி விநியோகம் செய்வது உறுதி செய்யப்படும். மேலும் பொதுமக்களுக்கு ஆவினின் அனைத்து வகையான பொருட்களும் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் தயிர் மற்றும் பன்னீர் விற்பனையை அதிகரிக்கும் வகையில் மாவட்டம்தோறும் மொத்த விற்பனையாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் ஒரே நாளில் 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Mano Thangaraj ,CHENNAI ,Dairy Minister ,District Cooperative Milk Producer Unions ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் சித்தாந்த ரீதியாக...