×

பள்ளி வேனில் சிக்கி 1 வயது குழந்தை பலி

பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள சௌதாபுரம் கொல்லப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். நூற்பு ஆலை மேற்பார்வையாளர். மனைவி அபிநயா. விசாகன்(4), வெற்றிவேல்(1) என 2 குழந்தைகள் உண்டு. யூகேஜி படிக்கும் விசாகளை நேற்று காலை 8 மணியளவில் வீட்டு முன் வந்த பள்ளி வேனில் அபிநயா ஏற்றி விட்டுள்ளார். பின்னர் டிரைவர் செல்வராஜ் வேனை நகர்த்தியபோது அபிநயாவுடன் நின்றிருந்த குழந்தை வெற்றிவேல் பின்புற சக்கரத்தினுள் விழுந்தான். இதில் சக்கரம் தலையில் ஏறி பரிதாபமாக உயிரிழந்தான். வேன் டிரைவர் செல்வராஜை போலீசார் கைது செய்தனர்.

The post பள்ளி வேனில் சிக்கி 1 வயது குழந்தை பலி appeared first on Dinakaran.

Tags : Pallipalayam ,Chauthapuram Mukili ,Pallipalayam, Namakkal District ,Spinning Mill ,Abhinaya ,Visakan ,Vetrivel ,UKG ,
× RELATED பள்ளிபாளையத்தில் சோதனை பான் மசாலா விற்ற கடைகளுக்கு அபராதம்