×

பால் கொள்முதலில் உச்சத்தை நோக்கி ஆவின்: பண்டிகை காலங்களில் தடையின்றி விநியோகம்.! அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச பால் கொள்முதலாக 36.09 இலட்சம் லிட்டர் பால், 27 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் மூலம் ஆவின் கொள்முதல் செய்துள்ளது. மேலும் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உள்ளூர் விற்பனையான 4 இலட்சம் லிட்டர் பால் கணக்கில் கொள்ளும்போது தமிழ்நாட்டில் பால்வளத்துறை மூலமாக 40 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது 2800 மெ.டன் வெண்ணெய்யும், 4200 மெ.டன் பால் பவுடரும் கையிருப்பில் உள்ளது.

மேற்காணும் கையிருப்பைக் கொண்டு எதிர்வரும் பண்டிகை காலங்களுக்கு தேவையான பால் பொருட்களை பொது மக்களுக்கு தங்கு தடையின்றி விநியோகம் செய்வது உறுதி செய்யப்படும். மேலும் பொது மக்களுக்கு ஆவினின் அனைத்து வகையான பொருட்களும் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் தயிர் மற்றும் பன்னீர் விற்பனையை அதிகரிக்கும் வகையில் மாவட்டம் தோறும் மொத்த விற்பனையாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post பால் கொள்முதலில் உச்சத்தை நோக்கி ஆவின்: பண்டிகை காலங்களில் தடையின்றி விநியோகம்.! அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Mano Thangaraj ,Chennai ,Tamil Nadu ,District Cooperative Milk Producers Unions ,Minister Mano Tangaraj ,
× RELATED தமிழகத்தில் சித்தாந்த ரீதியாக...