×

ராசிபுரத்தில் மனித சங்கிலி போராட்டம்

ராசிபுரம், ஜூலை 21: ராசிபுரம் புதிய பஸ் நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நகரமன்ற கூட்டத்தில், பஸ்நிலையம் மாற்றி அமைப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 2 தினங்களுக்கு முன்பு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. நேற்று 200க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மக்கள் குழு நிர்வாகி செல்வம் கூறுகையில், தற்போது செயல்பட்டு வரும் பஸ்நிலையம், நகர் பகுதிக்கு போதுமானதாக உள்ளது. பழைய பஸ் நிலையத்திலிருந்து, கடைவீதி, நாமக்கல் சாலை, சேலம் சாலை உள்ளிட்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பஸ்கள் செல்லும். நகராட்சி நிர்வாகம் பஸ் நிலையம் அமைக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்,’ என்றார்.

The post ராசிபுரத்தில் மனித சங்கிலி போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Rasipuram New Bus Station ,Human chain ,in ,
× RELATED புதிய ஸ்கேன் இயந்திரம் வாங்கி தருவதாக...