×

சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறல்: சலூன் கடைக்காரருக்கு 40 ஆண்டு சிறைதண்டனை

திருவனந்தபுரம்: முடிவெட்ட வந்த 11 வயதான 2 சிறுவர்களை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சலூன் கடை உரிமையாளருக்கு 40 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (64). இவர் பத்தனம்திட்டா மாவட்டம் மலையாளப்புழாவில் ஒரு சலூன் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த வருடம் அதே பகுதியை சேர்ந்த 11 வயதான இரண்டு சிறுவர்கள் முடி வெட்டுவதற்காக இவரது சலூனுக்கு வந்தனர். அப்போது சந்திரன் இருவரையும் மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.

இந்த விவரம் அவர்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியருக்கு தெரியவந்தது. இதையடுத்து மலையாளப்புழா போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் போக்சோ பிரிவுகளில் சந்திரன் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். பத்தனம்திட்டா போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று நீதிபதி டோனி தாமஸ் தீர்ப்பளித்தார். சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சலூன் கடை உரிமையாளர் சந்திரனுக்கு 40 வருடம் கடுங்காவல் சிறையும், ₹3.5 லட்சம் அபராதமும் விதித்து உத்திரவிட்டார்.

The post சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறல்: சலூன் கடைக்காரருக்கு 40 ஆண்டு சிறைதண்டனை appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kadungawal ,Moon ,Neyyatinkarai ,Thiruvananthapuram, Kerala ,
× RELATED மேஷம்