×

கறம்பக்குடி அருகே இடிந்து விழும் ஆபத்தான அங்கன்வாடி கட்டிடம்

 

கறம்பக்குடி, ஜூலை 20: கறம்பக்குடி அருகே இடிந்து விழும் ஆபத்தான அங்கன்வாடி கட்டிடத்தை இடித்து அகற்றி புதிதாக கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பல்லவராயன்பத்தை ஊராட்சியில் பல்வேறு கிராமங்கள் உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களில் உள்ள குழந்தைகளின் நலன் கருதி பெற்றோர்கள் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று பல ஆண்டுகளுக்கு முன்பு பல்லவராயன்பத்தை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அங்கன்வாடி மையம் அமைக்கபட்டு செயல்பட்டு வந்தது, தற்போது 10 ஆண்டுகளுக்கு மேலாக அந்த அங்கன்வாடி மையம் பழுதடைந்து ஓடுகள் பெயர்ந்து பூச்சுகள் பெயர்ந்து உள்ளன.

இதன் காரணமாக தற்காலிகமாக அங்கன்வாடி மையம் மற்றொரு மாற்று கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. 50க்கு மேற்பட்ட குழந்தைகள் பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தின் அருகே கல்வி பயின்று வருவதால் அதன் அருகிலேயே பல ஆண்டுகளாக பழுடைந்து எந்த நேரத்திலும் இடிந்து ஆபத்தை ஏற்படுத்த கூடிய நிலையில் உள்ள பராமரிபின்றி காணப்படும் அங்கன்வாடி மையத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும். மீண்டும் புதிதாக கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கறம்பக்குடி அருகே இடிந்து விழும் ஆபத்தான அங்கன்வாடி கட்டிடம் appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Karambakudi ,Pallavarayanapath Uratchi ,Pudukkottai district ,Dinakaran ,
× RELATED கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த மாடு மீட்பு