×

கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த மாடு மீட்பு

 

கறம்பக்குடி,அக்.18: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பெரியகோட்டை காடு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். விவசாயி. இவரது மாடு, மேச்சலுக்குச் சென்ற இடத்தில் தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டது. இது தொடர்பாக அக்கம், பக்கத்தினர் கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் சிறைசீலன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றுக்குள் விழுந்த மாட்டை உயிருடன் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

The post கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த மாடு மீட்பு appeared first on Dinakaran.

Tags : Karambakudi ,Periyakottai ,Pudukottai ,Karambakudi fire station ,Dinakaran ,
× RELATED வீட்டிற்குள் புகுந்த விஷப்பாம்பு