×

நேரக்காப்பாளர் மீது தாக்குதல்

சேலம், ஜூலை 19: நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகேயுள்ள கந்தம்பாளையம் மேற்கு தெருவை சேர்ந்தவர் முருகசுந்தரம் (49). இவர் ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாப்பில், அரசு பேருந்து நேரக்காப்பாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், தனியார் பேருந்து உரிமையாளரான வெண்ணந்தூர் நடுப்பட்டியை சேர்ந்த மணிக்கும் பேருந்து புறப்படும் நேரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், முருகசுந்தரத்தை மணி தாக்கினார். இதில் காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றிய புகாரின் பேரில் ஆட்டையாம்பட்டி போலீசார், மணி மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

The post நேரக்காப்பாளர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Salem ,Murugasundaram ,Kanthampalayam West Street ,Paramathi ,Namakkal district ,Attaiyambatti ,Vennandur Nadupatti ,
× RELATED தூய்மை குறித்து மாணவர்கள் கலைநிகழ்ச்சி