×

தொழிலாளியை தாக்கி செல்போன் பறிப்பு

சேலம், ஜூலை 19: சேலம் தாதுபாய்குட்டை பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(29). தொழிலாளியான இவர் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 4 சிறுவர்கள், முருகேசனை தாக்கி அவரிடமிருந்து செல்போனை பறித்து சென்றனர். இதுபற்றி முருகேசன் டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, முருகேசனை தாக்கி செல்போனை பறித்து சென்ற சிறுவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தொழிலாளியை தாக்கி செல்போன் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Murugesan ,Dadhubaigutta ,Murugesan Town Crime Branch Police ,Dinakaran ,
× RELATED போலி பத்திரப்பதிவு குறித்து...