×

பேச்சு, கவிதை போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு: ஒன்றிய தலைவர் வழங்கினார்

 

திருச்சுழி, ஜூலை 18: தமிழ்நாடு முதலமைச்சர் காலை உணவு திட்டம் கடந்த 15ம் தேதி அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டது. தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கல்லூரணியில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் துவக்கி வைத்து மாணவ, மாணவியர்களுடன் சேர்ந்து காலை உணவினை அருந்தினார். இதனை தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தலின்பேரில் திருச்சுழி அருகே உள்ள தொப்பாலக்கரையில் அரசு உதவிபெறும் பள்ளியில் ஒன்றிய தலைவர் பொன்னுத்தம்பி காலை உணவுத்திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த பேச்சு போட்டி, கவிதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். காமராஜர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் திருச்சுழி ஒன்றிய துணைத்தலைவர் மூக்கையா, தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் தொல்காப்பியம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

The post பேச்சு, கவிதை போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு: ஒன்றிய தலைவர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Union ,Thiruchuzhi ,Nadu ,Tamil Nadu ,Finance Minister ,Tangam ,Southern State College ,
× RELATED அருப்புக்கோட்டை அருகே சாலை மறியல்...