×

பொள்ளாச்சி அருகே நீதிபதி பலி: ஒருவர் கைது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே நீலகிரி மாவட்ட நீதிமன்ற கூடுதல் நீதிபதி மீது பைக் மோதியதில் உயிரிழந்தார். இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே நீதிபதி கருணாநிதி உயிரிழந்தார். நீதிபதி கருணாநிதி பலியான சம்பவத்தில் கே. நாகூரை சேர்ந்த வாஞ்சி முத்து என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பைக் ஒட்டி வந்து மோதிய வாஞ்சி முத்துவை கைது செய்து கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பொள்ளாச்சி அருகே நீதிபதி பலி: ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Neelagiri District Court ,Judge ,Karunanidhi ,VANGCHI PEARL ,NAGORE ,Dinakaran ,
× RELATED வரத்து அதிகரிப்பால் பொள்ளாச்சி மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவு