×

அக்காவை நிச்சயம் செய்துவிட்டு 13 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த ரவுடி: போக்சோ சட்டத்தில் கைது

செங்கல்பட்டு: அக்காவை நிச்சயம் செய்துவிட்டு, 13 வயது மைத்துனியை கடத்தி பலாத்காரம் செய்த ரவுடியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சென்னை ராயப்பேட்டை பகுதியில் 8ம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவி, மாயமானதாக அவரது தாய், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சிறுமி பயன்படுத்திய செல்போன் மற்றும் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, சிறுமியின் அக்காவை நிச்சயம் செய்த ஐஸ்அவுஸ் பி.எம்.தர்கா 2வது தெருவை சேர்ந்த மணிகண்டன் (எ) திக்குவாய் மணிகண்டன் (எ) பிஸ்கட் மணி என்பவர் பைக்கில் அழைத்து சென்றது தெரியவந்தது. 2 நாட்கள் தேடலுக்கு பிறகு, செங்கல்பட்டு அருகே சிறுமியுடன் தங்கி இருந்த மணிகண்டனை போலீசார் மடக்கி பிடித்தனர். பிறகு சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, நான் வீட்டில் தனியாக இருந்த போது, மணிகண்டன் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

அதோடு இல்லாமல் பைக்கில் மெரினா நொச்சிக்குப்பத்தில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து மீண்டும் பலாத்காரம் செய்தார். பின்னர், ஆட்டோவில் செங்கல்பட்டுக்கு அழைத்து சென்று, அங்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிறுமி கூறினாள். இதையடுத்து ராயப்பேட்டை போலீசார் இந்த வழக்கை, அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர்.

அதன்படி மகளிர் போலீசார் சம்பவம் குறித்து புதிய குற்றவியல் சட்டம் பிஎன்எஸ் பிரிவின்படி போக்சோ சட்டத்தில் ரவுடி மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். ராயப்பேட்டையில் சரித்திர பதிவேடு குற்றவாளியான மணிகண்டன் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. அக்காவை நிச்சயம் செய்துவிட்டு, அவரது 13 வயது தங்கையை ரவுடி பலாத்காரம் செய்து, கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post அக்காவை நிச்சயம் செய்துவிட்டு 13 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த ரவுடி: போக்சோ சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Tags : Rowdy ,Chengalpattu ,Rayapetta ,Chennai ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி...