×

காஞ்சிபுரம் மண்டலத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர் முகாம்


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மண்டலத்தில் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களின் குறை தீர்க்கும் முகாம் இன்று நடைபெறவுள்ளது என்று கூட்டுறவு இணை பதிவாளர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களின் குறைகளை தீர்க்கும் வகையில், காஞ்சிபுரம் மண்டல அளவில், ‘பணியாளர் நாள்’ நிகழ்வு இன்று (12.7.2024) நடைபெறவுள்ளது. அதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மண்டலத்தில் வெள்ளிக்கிழமையான இன்று எண்.5-ஏ, வந்தவாசி சாலை, ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகம் (மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில்) என்ற முகவரியில் இயங்கி வரும் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.

மேற்காணும், முகாமில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து வரும் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் தங்களது பணி தொடர்பாகவும், பணியின்போதும் அல்லது வேறு வகையிலும் ஏற்படும் குறைகள் தொடர்பாக மனுக்களை அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post காஞ்சிபுரம் மண்டலத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Tags : Society ,Kanchipuram Mandal ,Kanchipuram ,Jayashree ,Joint Registrar of Cooperatives ,Regional ,Co-operative Director ,
× RELATED மிசோரம் அதிகாரிகள் குழுவினர் நீலகிரி...