×

புதுமாப்பிள்ளையை காரில் கடத்திய சென்னையை சேர்ந்த 4 பேர் கைது

சென்னை: ஈரோடு மாணிக்கம்பாளையம், வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ரஷியாபானு (25). இவருக்கும் சென்னையை சேர்ந்த ஹரிபிரசாத் மகன் நிஷான் (29) என்பவருக்கும் கடந்த 4ம் தேதி சென்னையில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. நிஷான் சென்னையில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். திருமணம் முடிந்த நிலையில் ஈரோட்டில் உள்ள ரஷியாபானு வீட்டிற்கு வந்துள்ளனர். இந்நிலையில் நிஷான் நேற்றிரவு வீட்டிற்கு அருகில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது கடைக்கு அருகில் சென்ற போது திடீரென்று கார் ஒன்று வந்துள்ளது. காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் நிஷானை தாக்கி காரில் கடத்தி சென்றனர்.

தகவலின் பேரில், ஈரோடு வடக்கு போலீசார், மாவட்டம் முழுவதும் உஷார்படுத்தினர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் தலவாசல் என்ற இடத்தில் கார் சென்றபோது போலீசார் வாகன சோதனையில் மடக்கி பிடித்து, விசாரணை நடத்தினர். அதில், நிஷான் சென்னையில் ஒரு பெண்ணிடம் பழகி வந்த நிலையில், அப்பெண்னை கைவிட்டுவிட்டு ஈரோட்டை சேர்ந்த ரஷியா பானுவை திருமணம் செய்தது தொடர்பாக ஏற்பட்ட முன் விரோதத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள், நண்பர்களான சென்னையை சேர்ந்த சுசீல் சுந்தர் (32), கணேஷ் (31), ஜெகதீஸ் (32), மோகன்ராஜ் (34) ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

The post புதுமாப்பிள்ளையை காரில் கடத்திய சென்னையை சேர்ந்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pudumapillai ,Rashiyaphanu ,Erode Manickampalayam ,Hariprasad ,Nishan ,
× RELATED ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு...