×

என்.எஸ்.சி போஸ் சாலை பகுதியில் இருந்த பிள்ளையார் கோயில் மீண்டும் கட்டப்படும்: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்

சென்னை, ஜூலை 11: என்எஸ்சி போஸ் சாலையில், இடிக்கப்பட்ட பிள்ளையார் கோயில் மீண்டும் கட்டித்தரப்படும் என அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பிள்ளையார் கோயிலை காணவில்லை என்று தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலையில் வ.உ.சி. நகரில் அமைந்திருந்த செல்வ சுந்தர விநாயகர் கோயிலை காணவில்லை எனவும், நூற்றாண்டு பழமையான கோயிலை இடித்து விட்டு, அங்கு மாநகராட்சி குப்பை தொட்டிகளை வைத்துள்ளதாக கூறி சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் அருண் நடராஜன், கோயில் அமைந்திருந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டு விட்டன. மீண்டும் கோயில் கட்டிக் கொடுக்கப்படும் என தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

The post என்.எஸ்.சி போஸ் சாலை பகுதியில் இருந்த பிள்ளையார் கோயில் மீண்டும் கட்டப்படும்: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Pillaiyar temple ,NSC Bose road ,Charity ,ICourt ,Chennai ,Chennai High Court ,Pilliyar temple ,Chennai NSC… ,Charities Department ,
× RELATED சங்கராபுரம் அருகே பரபரப்பு வீட்டின்...