×

வேலைக்கு சென்ற முதியவர் கிணற்றில் சடலமாக மீட்பு

தர்மபுரி, ஜூலை 11: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் குழந்தைகவுண்டர் (89). சிறுதானிய வியாபாரியான இவர், கடந்த 7ம் தேதி வழக்கம் போல் வேலைக்கு செல்வதாக கூறி சென்றார்.
அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல்ேவறு இடங்களில் அவரை தேடியபோது, ஆதனூர் பகுதியில் விவசாய கிணற்றில் சடலமாக கிடந்தார். இந்த தகவல் அறிந்த பென்னாகரம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து, குழந்தை கவுண்டர் கிணற்றில் தவறி விழுந்தாரா அல்லது யாரேனும் அடித்து கொலை செய்து, கிணற்றில் வீசி விட்டுச் சென்றனரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வேலைக்கு சென்ற முதியவர் கிணற்றில் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Bennagaram B. Agraharam ,Dharmapuri district ,
× RELATED தம்பதியை கொலை செய்து சடலங்களுடன்...