×

10, 12ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஐ.டி.ஐ.யில் சேர வரும் 15ம் தேதி சிறப்பு முகாம்: பழங்குடியினர் நலத்துறை ஏற்பாடு

சென்னை: 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்திட பழங்குடியினர் நலத்துறை சார்பில் வரும் 15ம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நான் முதல்வன் திட்டத்தின் படி, பழங்குடியின நல உண்டு உறைவிடம் மற்றும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை கண்டறிந்து 100 சதவீத உயர்கல்வியினை உறுதிப்படுத்திட வரும் 15ம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மேலும் அந்தந்த மாவட்டங்களில் இயங்கிவரும் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் மாணவர்களை சேர்த்துக் கொள்ள ஐ.டி.ஐ முதல்வர்களிடம் கலந்துரையாடப்பட்டு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த முகாமை 58 ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து நடத்திட உள்ளனர். மேலும், 10 மற்றும் 12ம் வகுப்பு துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் அவர்களின் விருப்பப்படி கல்லூரிகளில் சேர்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகாம் நடைபெறும் மையம் பங்கேற்கும் மாவட்டங்கள்
அரசு தொழிற்பயிற்சி நிறுவனம், ஜமுனாமரத்தூர், ஜவ்வாதுமலை, திருவண்ணாமலை. திருவண்ணாமலை, திருப்பத்தூர், தருமபுரி
அரசு தொழிற்பயிற்சி நிறுவனம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி. கள்ளக்குறிச்சி
அரசு தொழிற்பயிற்சி நிறுவனம், கருமந்துறை, சேலம். சேலம்
அரசு தொழிற்பயிற்சி நிறுவனம், கொல்லிமலை, நாமக்கல். நாமக்கல், திருச்சி
அரசு தொழிற்பயிற்சி நிறுவனம், ஆனைக்கட்டி, கோவை. கோவை, ஈரோடு, திண்டுக்கல்
அரசு தொழிற்பயிற்சி நிறுவனம், கூடலூர், நீலகிரி. நீலகிரி

The post 10, 12ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஐ.டி.ஐ.யில் சேர வரும் 15ம் தேதி சிறப்பு முகாம்: பழங்குடியினர் நலத்துறை ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : ITI ,tribal welfare ,Chennai ,Tribal Welfare Department ,Annadurai ,Dinakaran ,
× RELATED குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து...