- சென்னை
- உணவு வழங்கல் திணைக்களம்
- உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு திணைக்களம்
- புகார் முகாம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
சென்னை: உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொது விநியோக திட்டத்தின் பயன்களை பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் வரும் 13ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
இதில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
The post பொது விநியோகத்தின் பயன்களை அறிய சென்னையில் வரும் 13ம் தேதி குறைதீர்க்கும் கூட்டம்; உணவு பொருள் வழங்கல் துறை அறிவிப்பு appeared first on Dinakaran.