×

வரும் 13ம் தேதி நடக்கிறது குடும்ப அட்டை குறைதீர் முகாம்

திருவள்ளூர்: வரும் 13ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 குறு வட்டங்களில் ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து, திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம் வருகிற 13ம் தேதி (சனிக்கிழமை) வட்ட அளவில், வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

குறைதீர் முகாமில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன் பெறலாம். மேலும், பொது விநியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் சிறப்பு அத்தியாவசியப் பொருட்களான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை கடந்த ஜூன் மாதம் பெற தவறிய குடும்ப அட்டைதாரர்கள் ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post வரும் 13ம் தேதி நடக்கிறது குடும்ப அட்டை குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Tiruvallur district ,Collector ,Prabhu Shankar ,
× RELATED மணலி புதுநகர் அருகே இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு..!!