×

குட்கா விற்ற பெண் கைது

திருச்சி. ஜூலை 8: திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் எடமலைப்பட்டி புதூர் குட்டிமலை சாலையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பெட்டி கடையின் உரிமையாளரான மணிகண்டம் தீனதயாளன் நகரை சேர்ந்த அஷ்ரப் அலி என்பவரின் மனைவி ரகமது நிஷா (50) என்பவரை போலீசார் கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

 

The post குட்கா விற்ற பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Gutka ,Trichy ,Edamalaipatti ,Puthur ,Edamalaipatti Budur Kuttimalai Road ,Dinakaran ,
× RELATED லாலாபேட்டையில் குட்கா விற்ற ஒருவர் மீது வழக்கு