×

பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாப சாவு

 

விருதுநகர், ஜூலை 8: பைக்கில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். விருதுநகர் பர்மா காலனியை சேர்ந்தவர் அல்அமீன்(22). இவர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தற்காலிகமாக கேபிள் போடும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தனது நண்பரை அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக இறக்கி விட்டுள்ளார்.

வீட்டிற்கு திரும்பி வரும் போது நான்குவழிச்சாலை புல்லாலக்கோட்டை ரோடு முக்கில் இருந்து நான்குவழிச்சாலை மெயின் ரோட்டில் ஏறிய போது முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அல்அமீன் உயிரிழந்தார். இது தொடர்பாக மேற்கு போலீசில் தந்தை அப்துல்ராஹ்மான் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாப சாவு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Al-Ameen ,Virudhunagar Parma Colony ,PSNL ,
× RELATED சிவகாசி, கோவில்பட்டி பஸ்கள்...