×

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்

பாலக்காடு, ஜூலை 7: நீட் மற்றும் நெட் தேர்வுகளை ரத்து செய்யகோரியும், விதிமுறைகளை மீறி முறைகேடு நடத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய இளைஞர் காங்கிரஸ் பாலக்காடு மாவட்ட கமிட்டி சாரபில் பாலக்காடு தலைமை தபால் நிலையம் முன்பாக முற்றுகை போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்தை என்சிபி மாவட்ட தலைவர் ராமசாமி தொடங்கி வைத்து பேசினார். போராட்டத்திற்கு சித்திக் மாஸ்ட்டர் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் அப்துல்லா முன்னிலை வகித்து பேசினார். மாவட்ட செயலாளர் நஜீப், சதகத்துல்லா, நாஷர், ஷெபின், ராஜீவ், ஆகியோர் உள்ளிட்ட பிரமுக தலைவர்கள் முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட செயலாளர் ஷாஜஹான் வரவேற்றார், அய்ஷாபானு நன்றி கூறினார்.

The post சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Palakkad ,National Youth Congress Palakkad district committee ,NEET ,NET ,
× RELATED கொழிஞ்சாம்பாறையில் படுக்கை அறையில்...